Thursday, 25 February 2016

எனக்கு சம்மந்தமே இல்லை, யார் வதந்தியை கிளப்பியது- ராதிகா கோபம்

Tags

இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படத்தின் டப்பிங்கை சமீபத்தில் தான் முடித்தார் நடிகை ராதிகா. இவர் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரயிலும் பிரபலம்.

இந்நிலையில் இவரின் கணவர் மற்றும் நடிகர் சரத்குமார் சமீபத்தில் ஆளுங்கட்சியில் இருந்து வெளியேறினார். இதற்கு முழு காரணமும் ராதிகா தான் என ஒரு செய்தி உலா வந்தது.

இதை அறிந்த ராதிகா, 'எனக்கு அவர் அந்த கட்சியிலிருந்து வெளியேறியதற்கு எந்த சம்மந்தமும் இல்லை, யார் இதுப்போல் வதந்தியை கிளப்பி விடுவது.

நான் ஒரு போதும் என் கணவர் அரசியல் செயல்பாடுகளில் தலையிடுவதில்லை, தற்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை, ஆனால், எதிர்காலத்தில் கண்டிப்பாக வருவேன் 'என கூறியுள்ளார்.


EmoticonEmoticon